• Download mobile app
20 Sep 2026, SundayEdition - 3875
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911 ஆக உயர்வு

April 10, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று நோய் மேலும் 77 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது; மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 911ஆக அதிகரித்தது.தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதியான 5 பேர் மூலமாக 72 பேருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. தூத்துக்குடியில் இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இதுவரை 44 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது கட்டத்திலேயே உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் கட்டத்திற்கு சென்று விடக் கூடாது என்பதற்காக கடும் முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

கொரோனா நோய் தாக்கம் கட்டுக்குள் வராமல் ஊரடங்கை தளர்த்தினால், இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பலன் இல்லை என மருத்துவர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளது. நாளை முதல்வரின் பிரதமருடனான காணொளிக் காட்சி ஆலோசனை, அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த முடிவு செய்யப்படும்.90% குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது.வீட்டிற்கு நேரடியாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க