• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் பழனிசாமி

April 9, 2020 தண்டோரா குழு

கொரோனா தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வர வேண்டி உள்ளது.2,500 வென்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வருகின்றன.144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல்
செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும். கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்தே அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்
கொரோனா பரவல் 3ஆம் கட்டத்திற்கு நகர வாய்ப்பு உள்ளது.சந்தைகளில் தனி மனித இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிப்பது இல்லை. இதன் காரணமாகவே, தமிழ்நாடு முழுவதும் நடமாடும் காய்கறி கடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 9 பேர் உயிரிழப்பு; நேற்று 8ஆக இருந்த பலி எண்ணிக்கை இன்று 9 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க