• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனது சொந்த சேமிப்பு பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய கோவை ஆட்சியர்

April 8, 2020 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சொந்த சேமிப்பு பணம் ஒரு லட்ச ரூபாயைக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் பள்ளி சிறுவர்கள் கூட தங்களது சேமிப்பை நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.இவ்வாறு வழங்கப்படும் நிதிக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பாக சொந்த சேமிப்பு பணமான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகனிடம் வழங்கினார். இதுவரை கோவை மாவட்டத்தில் 6.4 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பங்களிப்பாக வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க