• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரங்குகளுக்கு கருணையோடு உணவு வழங்கி வரும் செம்மேடு கிராம மக்கள்

April 7, 2020 தண்டோரா குழு

ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் வரவின்றி உள்ள பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் உணவின்றி தவித்து வரும் குரங்குகளுக்கு கருணையோடு செம்மேடு கிராம மக்கள் உணவு வழங்கி வருக்கின்றனர்.

தென்கயிலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் மலையடிவாரத்தில் ஏராளமான குரங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவைகளுக்கு வழக்கமாக உணவு வழங்குவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பக்தர்கள் வருகை இல்லை. இதனால் போதிய உணவு இன்றி குரங்குகள் தவித்து வத்தன.இந்நிலையில் கோவிலுக்கு அருகில் வசித்து வரும் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செம்மேடு கிராம மக்கள் ஒன்று கூடி தினமும் ஊர் பகுதியில் வைத்து உணவு சமைத்து பின்னர் கோவில் வளாகத்திற்கு சென்று உணவில்லாமல் தவித்து வரும் குரங்குகளுக்கு கருணையோடு உணவு வழங்கி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உணவை எடுத்து சென்று பாக்கு மட்டையில் வைக்கும் உணவை குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து உணவருந்தி செல்கின்றன.

உணவில்லாமல் தவித்து வரும் ஏழைகளுக்கு இந்த சமயத்தில் உணவளித்து வரும் மனித நேயர்கள் ஒரு புறம் இருக்க உணவில்லாமல் தவிக்கும் வாயில்லா ஜீவன்களான இந்த குரங்குகளுக்கு கருணையோடு உணவு வழங்கி வரும் செம்மேடு கிராம மக்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க