• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கள்ளச்சந்தையில் மது விற்ற நான்கு பேர் கைது

April 3, 2020 தண்டோரா குழு

கணபதி சங்கனூர் சாலையிலுள்ள மதுபான கடையில் கள்ளச்சந்தையில் மது விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி சங்கனூர் சாலையில் மதுபானக்கடையின் பின்புறம் சட்டவிரோதமாக செயல்பட்ட மது விற்பனை கூடத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கிருந்த 75 ஆயிரம் மதிப்பினாலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்டன. இதனையடுத்து கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் கோவை கணபதி சங்கனூர் சாலையில் செயல்படும் மதுபான கடை எண் 1599 ன் பின்புறம் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் மதுபான விற்பனையானது நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு புகார் வந்தது.

இதனையடுத்து வடக்கு வட்டாட்சியர் மகேஸ் தலைமையிலான குழுவினர் சட்டவிரோதமாக விற்பனை நடைபெற்ற தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் சோதனை செய்தனர். அப்போது கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக மதுபானங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 75000 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட
பார் உரிமையாளர் பரமசிவம்,செல்வம்
சேகர்செல்வம் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்த கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் படிக்க