• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு

April 2, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாட்டில் கொரானா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 75 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 74 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.மொத்தம் உள்ள 309 பேரில் 264 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். தமிழ்நாட்டில் 17 கொரானா பரிசோதனை மையங்கள் உள்ளது.மேலும் 6 மையங்கள் இந்த வாரம் இணைக்கப்படும்.இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 20 மாவட்டங்களில் கொரானா பாதிப்பு பரவியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.86,342 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று 77,000-ஆக இருந்த வீட்டுக் கண்காணிப்பு, 86,342-ஆக அதிகரித்து விட்டது என்றார்.

மேலும் படிக்க