• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அரசு உத்தரவை மீறிய உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

April 2, 2020 தண்டோரா குழு

கோவை மதுக்கரை அருகே அரசு உத்தரவை மீறி பொதுமக்களை கடையில் அமர வைத்து உணவளித்த தனியார் உணவகத்திற்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை அமலில் உள்ளது. மேலும் தொற்று பரவாமல் தடுக்கவும்,பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க உணவகங்களில் பார்சல் மட்டுமே வாங்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களை உணவகங்களில் அமர வைத்து உணவளிக்க கூடாது என உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கோவை மதுக்கரை குரும்பபாளையம் அருகே செயல்பட்டு வந்த ஸ்ரீ அம்மன் உணவகத்தில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளித்தால் உணவகத்திற்கு மதுக்கரை பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஏற்கனவே எச்சரித்த நிலையில் அரசு உத்தரவை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க