• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அரசு உத்தரவை மீறிய உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

April 2, 2020 தண்டோரா குழு

கோவை மதுக்கரை அருகே அரசு உத்தரவை மீறி பொதுமக்களை கடையில் அமர வைத்து உணவளித்த தனியார் உணவகத்திற்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை அமலில் உள்ளது. மேலும் தொற்று பரவாமல் தடுக்கவும்,பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க உணவகங்களில் பார்சல் மட்டுமே வாங்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களை உணவகங்களில் அமர வைத்து உணவளிக்க கூடாது என உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கோவை மதுக்கரை குரும்பபாளையம் அருகே செயல்பட்டு வந்த ஸ்ரீ அம்மன் உணவகத்தில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளித்தால் உணவகத்திற்கு மதுக்கரை பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஏற்கனவே எச்சரித்த நிலையில் அரசு உத்தரவை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க