• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

April 1, 2020 தண்டோரா குழு

கோவையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தாக தெரிவித்தார்.

மேலும், டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 190 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் கோவையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக
உயர்ந்துள்ளது.புதியதாக உறுதி செய்யப்பட்ட 28 பேரில், 27 பேர் டெல்லி நிகழ்வில் பங்கேற்றவர்கள்; மேட்டுப்பாளையம்- 21ல் 20 டெல்லி நிகழ்வில் பங்கேற்றவர்கள்; பொள்ளாச்சி – 7 – மொத்தம்-28 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில், 102 பேர் டெல்லி நிகழ்வில் பங்கேற்றது கண்டறியப்பட்டு, அதில், 70 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.அதில் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; (70 பேர்களின் விவரம் – மேட்டுப்பாளையம் 32, பொள்ளாச்சி 12, மாநகரம் 17, அன்னூர் 9)

மேலும் படிக்க