• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

April 1, 2020 தண்டோரா குழு

கோவையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தாக தெரிவித்தார்.

மேலும், டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 190 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் கோவையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக
உயர்ந்துள்ளது.புதியதாக உறுதி செய்யப்பட்ட 28 பேரில், 27 பேர் டெல்லி நிகழ்வில் பங்கேற்றவர்கள்; மேட்டுப்பாளையம்- 21ல் 20 டெல்லி நிகழ்வில் பங்கேற்றவர்கள்; பொள்ளாச்சி – 7 – மொத்தம்-28 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில், 102 பேர் டெல்லி நிகழ்வில் பங்கேற்றது கண்டறியப்பட்டு, அதில், 70 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.அதில் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; (70 பேர்களின் விவரம் – மேட்டுப்பாளையம் 32, பொள்ளாச்சி 12, மாநகரம் 17, அன்னூர் 9)

மேலும் படிக்க