March 19, 2020
தண்டோரா குழு
கோவையில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவையில் கடந்த 4 ம் தேதி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் என்பவர் தாக்கப்பட்டார். இவரை தாக்கியதாக எஸ்.டி.பி.ஐ அமைப்பின் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்த அசாருதீன் மற்றும் நூர் முகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதோ போல 5ம் தேதி அதிகாலைஇந்து முன்னணி பிரமுகர் ஆனந்தை தாக்கியதற்கு எதிர்வினையாக கோவை கணபதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பை சேர்ந்த அகில், பா.ஜ.கவை சேர்ந்த பாண்டி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரு சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்திரவினை சிறையில் மாநகர காவல் துறையினர் அளித்தனர்.