• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

March 19, 2020 தண்டோரா குழு

கோவையில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவையில் கடந்த 4 ம் தேதி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் என்பவர் தாக்கப்பட்டார். இவரை தாக்கியதாக எஸ்.டி.பி.ஐ அமைப்பின் ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்த அசாருதீன் மற்றும் நூர் முகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதோ போல 5ம் தேதி அதிகாலைஇந்து முன்னணி பிரமுகர் ஆனந்தை தாக்கியதற்கு எதிர்வினையாக கோவை கணபதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பை சேர்ந்த அகில், பா.ஜ.கவை சேர்ந்த பாண்டி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரு சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்திரவினை சிறையில் மாநகர காவல் துறையினர் அளித்தனர்.

மேலும் படிக்க