• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக செயல்பட்டு வருக்கிறது – பேராயர் திமோத்தி ரவீந்தர்

March 19, 2020

தென்னிந்திய திருச்சபையில் 8 மாவட்டங்கள் அடங்கிய 200 திருச்சபைகள் மற்றும் 150 கல்வி நிறுவனங்களில் கொரனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக செயல்பட்டு வருவதாக தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் தெரிவித்தார்.

சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டு உள்ளது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில். தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டலமான நீலகிரி கோவை திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் கிருஷ்ணகிரி தருமபுரி ஆகிய 8 வருவாய் மாவட்டங்கள் அடங்கிய 200 திருச்சபைகள் 150 கல்விநிறுவனங்கள் விடுதிகள் குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஒருநாள் வைரஸ் தடுப்பு முறைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்து இருப்பதாக கோவை திருமண்டல பேராயர் தீமோத்தி ரவீந்தர் அவர்கள் தெரிவித்தார் மேலும் ஆலயங்களில் தெர்மல் ஸ்கேனிங் முறையில் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆலயங்கள் மற்றும் சபா மண்டபங்களை கிருமிநாசினி கொண்டு தினந்தோறும் சுத்தம் செய்தல் வேண்டும் எனவும் சுற்றறிக்கை கொடுத்துள்ளதாகவும் ஆலயத்தில் வழிபாட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக வும் தெரிவித்தார்.

மேலும் படிக்க