• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு எஸ்.பி.டி ம௫த்துவமனை சார்பில் விழிப்புணர்வு முகாம்

March 12, 2020

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு எஸ்.பி.டி ம௫த்துவமனை மற்றும் தெற்கு ரயில்வேயும் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் சிறுநீரக விழிப்புணர்வு முகாமை இன்று நடத்தின.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 12ம் தேதி உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் கோவையை சேர்ந்த எஸ்.பி.டி மருத்துவமனை மற்றும் தென்னக ரயில்வே இணைந்து கோவை ரயில் நிலையத்தில் சிறுநீரக விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாமை நடத்தின.

இந்த முகாமை ரயில் நிலைய இயக்குநர் சதீஸ் சரவணன், கோட்ட பொறியாளர் நல்ல முத்து ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
எஸ்.பி.டி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் ம௫த்துவர் ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க