• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்கள் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களால் பரபரப்பு

February 27, 2020 தண்டோரா குழு

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்கள் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களால் பரபரப்பு ஜமாத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் நான்கு பேரை சிறைபிடித்து போலிசாரிடம் ஒப்படத்தனர்.

கோவையில் உக்கடம், கோட்டை மேடு பகுதியில் உள்ள வீடுகளில் ஆதார் கார்டுகள் , பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அடையாளங்களை நான்கு பேர் சேகரித்தும், செல்போன் மற்றும் டேப்லெட்டில் பதிவு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என அப்பகுதியில் உள்ள மக்களிடம் தகவல் பரவியுள்ளது.

இதனை தொடர்ந்து கோட்டை மேடு சின்னபள்ளி ஜமாத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட நான்கு பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் மக்கள் தொகை கணகெடுப்பு, தடுப்பூசி கணக்கெடுப்பு மற்றும் விற்பனை பொருட்கள் குறித்த கணக்கெடுப்பு என முண்ணுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனையடுத்து உக்கடம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடந்து போலீசார் நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் (வில்சன் கேர்) என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஊழியர்கள் எந்றும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனம் எனவும் தெரியவந்துள்ளது. அவர்கள் விற்பனை பொருட்கள் மக்களிடம் கொண்டு சென்றோம் என்ற ஆதாரத்திற்கா ஆதார் கார்டுகளை வாங்கியதாக கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க