• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

CAA-க்கு எதிராக கோவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – ஏராளமான போலீசார் குவிப்பு

February 19, 2020

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேசிய குடியுரிமை சட்ட திருத்தம் திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தில் சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்தும் மாநில அரசை கண்டித்தும் கோசங்கள் விட்டவாறு ரயில் நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து கோஷமிட்டனர்.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையில் ஐந்து துணை கமிஷனர், 20 பேர் காவல்துறை ஆய்வாளர்கள் 50 பேர் உள்பட 1,500 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க