• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

CAA-க்கு எதிராக கோவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – ஏராளமான போலீசார் குவிப்பு

February 19, 2020

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேசிய குடியுரிமை சட்ட திருத்தம் திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தில் சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்தும் மாநில அரசை கண்டித்தும் கோசங்கள் விட்டவாறு ரயில் நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து கோஷமிட்டனர்.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையில் ஐந்து துணை கமிஷனர், 20 பேர் காவல்துறை ஆய்வாளர்கள் 50 பேர் உள்பட 1,500 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க