• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

February 11, 2020

பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரையும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் மீது கடந்த மே மாதம் 24 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கையை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது..

மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு உள்ளதால் , வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கை கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டது கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த 5 பேரும் சேலம் மத்திய சிறையிலிருந்து கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்ற காவல் 25.2.2020 வரை நீடித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் உத்தரவு பிறப்பித்தது மட்டுமல்லாமல், பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றியும் நீதிபதி சக்திவேல் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் படிக்க