• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜய் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!

February 5, 2020 தண்டோரா குழு

சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

விஜய் – அட்லீ கூட்டணியில் உருவான பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. எனினும் இப்படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிடவில்லை.இதற்கிடையில், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி இந்நிறுவத்திற்கு பணம் வழங்கிய பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம், அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக விஜய்யிடம் விசாரணை நடைபெற்றது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாஸ்டர்’ படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜயின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.மேலும், நெய்வேலி என்எல்சியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மேலும் படிக்க