• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம்

January 28, 2020

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட்டது. தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு இனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரையும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் மீது கடந்த மே மாதம் 24 ஆம் தேதி குற்றப் பத்திரிக்கை தலைமை குற்றவியல் நடுபர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த குற்றப் பத்திரிக்கையின் நகல் குற்றவாளிகள் தரப்பிற்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு உள்ளதால் , வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்களை அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க