• Download mobile app
30 May 2025, FridayEdition - 3397
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கவுண்டம்பாளையத்தில் திடீரென தீ பிடித்து எரிந்த அரசு பேருந்து

January 25, 2020

கோவை கவுண்டம்பாளையம் அருகே தமிழ்நாடு அரசு விரவு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து திடீரென தீபிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கவுண்டம்பாளையம் அருகே தமிழ்நாடு அரசு விரவு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கு தொலை தூரம் செல்லும் வெளியூர் அரசு பேருந்துகள்களை பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று பணிமனையில் இருந்து வெளியே செல்ல கிளம்பிய ஒரு பேருந்தின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதைப் பார்த்ததும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டார். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. உடனடியாக கோவை வடக்கு தீயனைப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, விரைந்து வந்த தீயனைபுதுரையினர் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.அதற்குள்ளாக பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசார்ணையில் தெரியவந்துள்ளது. பேருந்து தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க