• Download mobile app
30 May 2025, FridayEdition - 3397
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தேசிய நெடுஞ்சாலையில் 9.5 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்

January 23, 2020

கோவை தேசிய நெடுஞ்சாலையில் 9.5 டன் செம்மர கட்டைகளை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக செம்மரக்கட்டைகள் கண்டெய்னர் லாரி மூலம் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை மாவட்டம் கணியூர் சோதனைச்சாவடியில் செவ்வாய் கிழமை இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேலூரில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்தபோது அதில் 9.5 டன் செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கண்டெய்னர் லாரி மூலம் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த ராஜ்குமார் என்பவரை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த 9.5 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 4.27 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செம்மர கட்டைகளை கடத்தி வந்த ராஜ்குமாரை கோவை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க