• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 20 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் கைது

January 22, 2020

கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் அம்பிகா நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். பிஎஸ்சி பட்டதாரியான இவர் காட்டூர் விவேகானந்தா ரோட்டில் ட்ராவல்ஸ் அலுவலகம் நடத்தி வந்தார்.மேலும் வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து இருந்ததாக தெரிகிறது.

இதனை நம்பிய கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் சேர்ந்த பி இ பட்டதாரி ஜெயகாந்த் என்பவர் மோகன்ராஜிடம் ரூபாய் 3 லட்சத்து 14 ஆயிரம் கொடுத்துள்ளார். அதுபோல் மேலும் சிலர் பணம் கட்டியுள்ளனர். ஆனால் மோகன்ராஜ் கூறியபடி யாரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சில தினங்களாக மோகன்ராஜ் நடத்திவந்த அலுவலகம் பூட்டி கிடந்தது இதுதொடர்பாக ஜெயகாந்த் உள்ளிட்ட பாதிக்கப் பட்டவர்கள் காட்டூர் போலீசில் புகார் செய்தனர் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர் விசாரணையில் மோகன்ராஜ் 10க்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 20 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து மோகன்ராஜை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க