தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், வழக்குகளை கையாளுதல், போராட்டங்களை பிரச்சனைகள் இன்றி கையாளுதல், பொதுமக்களிடம் காவல் நிலையத்தில் நடந்து கொள்ளும் விதம் போன்றவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனரகம் புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்களை அறிவித்துள்ளது.
இதில் கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையம் 4212 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்தாக திண்டுக்கல், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த காவல் நிலையங்கள் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.முதலிடத்தை பிடித்த கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையத்தில் வரவேற்பு, குழந்தைகள் விளையாடும் பகுதி, தாய்மார்கள் அறை, பூங்கா, நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு கருவிகள் போன்றவை உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !