• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவி திருவள்ளுவர் படம் குறித்து வெங்கைய்யா நாயுடு விளக்கம்

January 16, 2020 தண்டோரா குழு

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து காவி உடை திருவள்ளுவர் படத்தை வெங்கையா நாயுடு நீக்கினார்.

இதனையடுத்து வழக்கமான வெள்ளை உடையுடன் திருவள்ளுவர் படத்தை பகிர்ந்துள்ளார். அதில், சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், காவி திருவள்ளுவர் படத்தை நீக்கியது தொடர்பாக விளக்கம் அளித்து வெங்கைய்யா பதிவிட்டுள்ள டுவீட்டில், முன்னர் பதிவிடப்பட்ட படம், துணை ஜனாதிபதி அலுவலகம் தவறுதலாக பதிவிட்டதாகும். ஊழியர் ஒருவர் தவறுதலாக பதிவிட்டுள்ளார். அது தவறான படம் என சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அப்படம் நீக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க