• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மென் பொறியாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது

December 30, 2019

கோவை மென் பொறியாளர் கொலை வழக்கு நான்கு பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 22 ஆம் தேதி கோவை குறிச்சி கல்லுக்குழி சாலை அருகே சக்திவேல் என்ற மென் பொறியாளர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் போலீஸார் 4 தனிப்படை அமைத்து தேடி வந்தது. விசாரணையில்
முன் விரோதம் காரணமாக சக்திவேலின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஆனந்த்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து எரித்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆனந்தகுமார், மற்றும் அவரது நண்பர்கள் வைத்தியலிங்கம், சரவணன், வேலுச்சாமி, போலீஸார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து புல்லட் பைக், செல்போன்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க