• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

December 27, 2019 தண்டோரா குழு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் அதிகாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஊழியர்களின் கூட்டு கமிட்டி சார்பில் குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று காலை 4 மணி முதல் 5 மணி வரை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாலையில் 30க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் நடத்துநர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் மேற்கொண்டனர்.கூட்டு கமிட்டி சார்பில் கோவை மண்டலத்தில் 19 போக்குவரத்து பணிமனைகளில் இந்த மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெறுவதாகவும்,தொடர்ச்சியாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பங்களிப்பு இருக்கும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க