• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜனவரி 2 ஆம் தேதி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் -மாற்றத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பு

December 24, 2019

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து வரும் ஜனவரி 2 ஆம் தேதி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என மாற்றத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு அன்மையில் கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாற்றத்திற்கான மாணவர் அமைப்பினர் கோவை எஸ்.பி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பெற பெற வேண்டும் என வலியுறுத்தியும், டெல்லியின் கழிவுவறைக்குள் சென்று மாணவிகளை கொடூரமாக தாக்கியதை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

மேலும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடுத்துள்ளதால், வரும் ஜனவரி 2 ஆம் தேதி மாணவர் கூட்டமைப்பு சார்பாக மிக பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர், இதனால் சிறிய தள்ளு முள்ளு ஏற்பட்டது இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் படிக்க