• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மனித வெடி குண்டாக வருவேன் என மிரட்டல் விடுத்த பெண்ணை பிடித்து போலீஸார் விசாரணை.

December 19, 2019

முதல்வர் , துணை முதல்வர் கோவை வரும் போது மனித வெடி குண்டாக வருவேன் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மிரட்டல் விடுத்த பெண்ணை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் அழைத்து பெண் ஒருவர் முதல்வர், துணை முதல்வர் கோவை வரும் போது மனித வெடிகுண்டாக வருவேன் என மிரட்டல் விடுத்து விட்டு சிம் கார்டை வீசி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது அப்பெண் கோவை செட்டிபாளையம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா (47) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடந்த 1990 – 97 வரை இவர் அதிமுக மகளிர் அணியின் முக்கிய பொருப்பில் இருந்தவர் என்பவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க