• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவர் இடிந்து விழுந்த விவகாரம் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு

December 11, 2019

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்
வழக்குப்பதிவு செய்யக்கோரி பெரியார் கூட்டமைப்பு சார்பில் ஆட்சித்தலைவரிடம் புகாரளித்தனர்.

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமானவர்கள் சுவற்றின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். அதே பகுதியைச்சேர்ந்த சிவ லட்சுமணன் என்ற இளைஞரை உதவி ஆய்வாளர் திலக் காவல் நிலையத்தில் வைத்து அடித்து , அவரது கையை நசுக்கி, விரலை ஒடித்துள்ளனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். 17 பேரின் இறப்புக்கு நியாயம். கேட்டு போராடிய 26 பேர் கைதை திரும்ப பெற வேண்டுமெனவும்,தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை குறிவைத்து தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெரியார் கூட்டமைப்புகள், தலித் அமைப்புகள்,வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சித்தாலைவரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க