• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குனியமுத்தூரில் கூர்மையான ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்

December 10, 2019

கோவை குனியமுத்தூர் அருகே கூர்மையான ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல், படுகாயங்களுடன் மாணவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் ஜோஸ். இவரது மகன் ஜீன்ஸ் திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் குனியமுத்தூர், பி.கே.புதூர் அருகே உள்ள தனியார் ஆண்கள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு விடுதி அருகே இருந்த போது ஜீன்ஸ் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. மற்றொரு அறையில் தங்கி இருந்த பிரின்ஸ் என்ற கல்லூரி மாணவரும் மது போதையில் இருந்துள்ளார். அப்போது ஜின்ஸ் , பிரின்ஸ் இடையே தகராறு ஏற்று இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டாத தெரிகிறது. அப்போது பிரின்ஸ் கூர்மையான ஆயுதத்தில் ஜின்ஸை தாக்கியதில் ஜின்ஸ் படுகாயமடைத்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த சக மாணவர்கள் ஜீன்ஸ் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு வந்த குனியமுத்தூர் போலீஸார் பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க