• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி

December 6, 2019

கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் . இவரது வீட்டில் சந்தன மரம் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை இவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் , அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சந்தன மரத்தை வெட்டியுள்ளனர். மரம் வெட்டும் சத்தம் கேட்டு விழித்த அசோக்குமார் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் தினேஷ் ஆகியோர் சத்தம் போட்டுள்ளனர் .

இதனையடுத்து திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் கத்தியை காட்டி , அசோக் மற்றும் தினேஷை சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். அப்போது இருவரும் பலமாக சத்தம் போட்டதால் மர்ம கும்பல் மரத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அசோக்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து காவல் துறையினர் , அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் 5 பேர் தங்களது முகத்தை துணியால் மூடியுள்ளனர். விட்டருகே உள்ள சாலையில் வாகனம் வரும்போது மண் குவியலுக்கு பின் மறைந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க