• Download mobile app
05 Jun 2025, ThursdayEdition - 3403
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கங்கனா ரணாவத்

December 5, 2019 தண்டோரா குழு

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்கிற தலைப்பில் படமாகிறது. இப்படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் சினிமா, அரசியல் என்று பல்வேறு கட்டங்கள் இருப்பதால், ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு தோற்றங்களில் வருகிறார்.அரவிந்த் சாமி இப்படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் ஜெயலலிதாவுடன் நடித்துள்ள பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களும் இடம்பெற உள்ளன.இந்நிலையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதனையடுத்து, தலைவி படக்குழுவும் ஷூட்டிங்கை சிறிது நேரம் நிறுத்தி வைத்து மௌன அஞ்சலி செலுத்திவிட்டு, ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவாக நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்க