• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீட்டில் கஞ்சா செடி வைத்து வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது

December 5, 2019 தண்டோரா குழு

கோவையில் தன்னுடைய தேவைக்காக வீட்டில் கஞ்சா செடி வைத்து வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கோவை ரத்தினபுரி, பக்தவச்சலம் வீதி, பகுதியில் வசிப்பவர் நாகராஜ் அவருடைய மகன் ரஞ்சித் (வயது 20), இவர் ஆட்டோ டிரைவர். அந்தப் பகுதியில் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் தன்னுடைய தேவைக்கு கஞ்சா செடிகள் வைத்து வளர்த்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அந்த வாசனை அடிக்கவே அவர்கள் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சற்று நேரத்திற்கு முன்பு போலீசார் அவர் வீட்டை சுற்றி வளைத்தன.

அப்பொழுது கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. உடனடியாக ரஞ்சித்தை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க