December 5, 2019
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் டெங்கு வைரஸ் காய்ச்சல்கள் தாக்கம் அதிக அளவு உள்ளது.இந்த காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும் காய்ச்சலின் தாக்கம் குறைந்தபாடில்லை தற்போது கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை டாக்டர்கள் தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் மேலும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 164 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.