• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையம் விபத்து; மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய சமூக நலத்துறை அமைச்சரிடம் மனு

December 3, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் விபத்து விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவை, மேட்டுப்பாளையம், நடூர் கண்ணப்பன் லே அவுட்டில் கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து 4 வீடுகளின் மேல் விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெல்லோட்டை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

அம்மனுவில்,தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் நகரின் அருகில் உள்ள நாடூர் கிராமத்தில் நேற்று 17 தலித் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தலித் மக்களைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக 22 அடி உயர பிரம்மாண்டமான சுவர் ஒன்று சிவசுப்பிரமணியம் என்னும் துணிக்கடை அதிபரால் கட்டப்பட்டிருந்தது. இச்சுவர் தலித் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் வீடுகளின் மீது இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் இடிபாடுகளின் அடியில் உயிரோடு புதைந்து விட்டனர். இக்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு நாகை திருவள்ளுவன் உள்பட செயற்பாட்டாளர்களும் மற்றும் உறவினர்களும் போராடிய போது தமிழ்நாடு காவல்துறை அவர்களைக் கொடூரமாகத் தாக்கி கைது செய்துள்ளது. ஆனால் தீண்டாமைச் சுவரை கட்டியவரும் இக்கொடூரச் சாவுகளுக்குக் காரணமானவரும் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

இங்கு உடனடியாக எஸ்.சி. ஆணையத்தின் சேர்மனை நாடூர் கிராமத்தின் சம்பவத்தை ஆய்வு செய்ய அனுப்பிட வேண்டும். எஸ்.சி. ஆணையத்தின் தலைவரிடம் காவல்துறையின் கொடூரத்தையும் 17 தலித் மக்கள் இறந்தது குறித்தும் முழு அளவிலான விசாரணை செய்திட உத்தரவிட வேண்டும். வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டத்தின் படி தொடர்ச்சியாக நடத்த வேண்டிய கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை நடத்திடுமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்ள வேண்டும். வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டத்தின் படி மாவட்ட அளவில் தொடர்ச்சியாக கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை நடத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டத்தின்படி சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க