• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்தமிழகத்தில் டிச.3,4 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

December 2, 2019 தண்டோரா குழு

தென்தமிழகத்தில் டிச.3,4 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில்,இந்திய வானிலை ஆய்வு மையத்தின்,சென்னை மண்டல இயக்குநர்,பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழையானது வலுப்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 இடங்களில் கனமழையும் 3 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இலங்கை மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தென் மேற்கு அரபிக் கடலில் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனால் அடுத்து வரும் நாட்களில் தென் தமிழகத்தில் நல்ல மழை பொழிவு இருக்கும். வடதமிழகத்தில் லேசான மழை மட்டுமே பெய்யும். குறிப்பாக டிசம்பர் 3, 4 தேதிகளில் அதிக மழை பொழிவை எதிர்பார்க்கலாம் என்றார்.

மேலும்,அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு,வடகிழக்கு பருவமழையானது,இதுவரை 40 சென்டி மீட்டர் பெய்துள்ளது.இயல்பான அளவு 36 சென்டி மீட்டர்தான். இது இயல்பைவிட 11 சதவிகிதம் அதிகமாகும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க