November 28, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.இதற்கிடையில், தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வுகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
5ம் வகுப்பு அட்டவணை
ஏப்.,15 – தமிழ்
ஏப்.,17 – ஆங்கிலம்
ஏப்.,20 – கணிதம்
8ம்வகுப்பு அட்டவணை
மார்ச் 30 – தமிழ்
ஏப்.,2 – ஆங்கிலம்
ஏப்.,8 – கணிதம்
ஏப்.,15 – அறிவியல்
ஏப்.,17 – சமூக அறிவியல்