• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் கண்காட்சி ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

November 23, 2019 தண்டோரா குழு

கேசிடி கல்லூரியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டிகள் மற்றும் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

கோவை குமரகுரு கல்லூரி மற்றும் ஐரோபோசக்ரா அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டி மற்றும் கண்காட்சியை நடத்துகின்றன. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த கோல்ப் விளையாடும் ரோபோக்கள் மற்றும், வடிவங்களை சரியான இடத்தில் வைக்கும் ரோபோக்களை கொண்டு மற்ற பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஐரோபோசக்ரா அகாடமியின் நிர்வாக இயக்குநர் அருண் ராஜிவ் கூறுகையில்,

“ரோபோடிக்ஸ் குறித்த விழிப்புணர்வையும், புரிதலையும் ஏற்படுத்தும் விதமாகவே இன்றைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் மாணவர்கள் ரோபோட்டிக்ஸ் துறையில் மாணவர்கள் சாதிக்க இது ஒரு உந்துதல் கொடுக்கும். அடுத்தாண்டு நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து மாணவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்கிறோம்.” என்றார்.

மேலும் படிக்க