கேசிடி கல்லூரியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டிகள் மற்றும் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
கோவை குமரகுரு கல்லூரி மற்றும் ஐரோபோசக்ரா அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டி மற்றும் கண்காட்சியை நடத்துகின்றன. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த கோல்ப் விளையாடும் ரோபோக்கள் மற்றும், வடிவங்களை சரியான இடத்தில் வைக்கும் ரோபோக்களை கொண்டு மற்ற பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து ஐரோபோசக்ரா அகாடமியின் நிர்வாக இயக்குநர் அருண் ராஜிவ் கூறுகையில்,
“ரோபோடிக்ஸ் குறித்த விழிப்புணர்வையும், புரிதலையும் ஏற்படுத்தும் விதமாகவே இன்றைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் மாணவர்கள் ரோபோட்டிக்ஸ் துறையில் மாணவர்கள் சாதிக்க இது ஒரு உந்துதல் கொடுக்கும். அடுத்தாண்டு நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து மாணவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்கிறோம்.” என்றார்.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்