• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம்

November 22, 2019

தமிழ் எழுத படிக்க தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு தமிழ் எழுத படிக்க தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கூறுகையில்,

தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் தமிழில் எழுதப்படிக்க தெரியாதவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது கீழமை நீதிமன்றங்களை பொருத்தவரை குறிப்பாக தமிழ் தான் பிரதானமாக இருக்கும் ஆனால் தமிழே தெரியாத ஒரு நபர் எப்படி அந்த பதவிக்கு விண்ணப்பித்து அங்கு வழங்கப்படும் வழக்குகளை கேட்டறிந்து தீர்ப்பு வழங்க முடியும் எனவே இதுபோன்ற செயல்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திரும்பப்பெற வேண்டும் மேலும் கீழமை நீதிமன்றங்களை பொருத்தவரை தமிழ்தான் பிரதான மொழியாக இருக்கின்றது எனவே தமிழ் தெரியாதவர்கள் அந்த பதவிக்கு விண்ணப்பித்தாலும் எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை எனவே தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க