November 19, 2019
தண்டோரா குழு
கல்லீரல் செயலிழந்த தந்தைக்கு 19 வயதான மகள் தனது கல்லீரலை தானமாக கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த 48 வயதான தந்தை, கல்லீரல் செயல் இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மாற்று சிகிச்சைக்கு காத்திருந்தார். இதையடுத்து பொறியியல் மாணவியான இவருடைய மகள் தமது தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுக்க முன் வந்தார்.
கல்லீரலை தானமாக கொடுத்த அந்தப் பெண் குணமடைந்த நிலையில் மருத்துவர்களுடன், சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.