• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரியநாயக்கன்பாளையத்தில் பஸ் – செங்கல் லாரி மோதல் – இருவர் படுகாயம்

November 18, 2019

கோவை சின்னதடாகம் பகுதியில் இருந்து இன்று காலை 9 மணியளவில் செங்கல் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது ஊட்டியில் இருந்து கோவையை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது. பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள எல்.எம்.டப்ள்யூ பிரிவு அருகே வரும்போது இரு வாகனங்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதில் லாரி டிரைவர் மற்றும் பஸ் டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பெண் பயணிகள் உட்பட 7 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அடிப்பட்ட டிரைவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் மோதிக்கொண்ட பஸ், லாரி ஆகிய இரு வாகனங்களும் நின்றதால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் படிக்க