• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குனியமுத்தூரில் செயின் பறிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம கொடுத்த பொதுமக்கள்

November 4, 2019 தண்டோரா குழு

கோவை குணியமுத்தூர் MS கார்டன் பகுதியில் செயின் பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலிசில் பிடித்து கொடுத்தனர்.

கோவை குணியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சுசீலா வயது 68 இவர் அந்த பகுதியில் தினமும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம் அதுபோல் இன்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது அடையாளம் தெரியாத ஒருவர் வந்து அருகில் உள்ள ஒரு பெண்ணிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து விட்டு, நடந்து சென்றுகொண்டிருந்த சுசீலா என்ற வயதான மூதாட்டியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளார். எனினும் சுதாரித்துக்கொண்ட மூதாட்டி செயினை பலமாக பிடித்துக்கொண்டு கூச்சல் இட்டதால் செயின் அருந்து பாதிசெயின் மட்டும் திருடனிடம் மாட்டிக்கொண்டது.

சத்தம் கேட்டுவந்த அந்த பகுதி இளைஞர்கள் ஓடிவந்து தப்பி ஓடமுயன்ற திருடனை பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் காவல் உதவி ஆய்வாளர் திருடனைப்பிடித்து காவல் நிலையம் கொண்டுச் சென்றார். விசாரணையில் அவன் பெயர் அம்சா என்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்தவன் எனவும் தெரியவருகிறது. மேலும் இவன் கும்பலாக திருட்டு செயல்களில் ஈடுபடுபவனா, இவன் மீது வேறு ஏதாவது வழக்குகள் இருக்கின்றதா. போன்ற பல்வேறு விசயங்கள் விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது,

இந்த பகுதி ஆள் நடமாட்டம் குறைவாக உள்ளதால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் இந்த பகுதியில் நடப்பதாக தெரிவித்தார்கள்.

மேலும் படிக்க