• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூரில் ஆம்புலன்ஸ் மோதி 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி

November 4, 2019 தண்டோரா குழு

சூலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வேன் மோதிய சம்பவத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

சூலூர் மதியழகன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரது மகன் சதீஷ் குமார் (18). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் விக்ரம்  இருவரும் நண்பர்களாவர். இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர்.நேற்று இரவு  இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு சுமார் 8 மணியளவில்  தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சூலூர் பேருந்து நிலையம் எதிரே சூலூர் நோக்கி  மிகவும் வேகமாக வந்து  கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென சாலையின் வலதுபக்கம் திரும்பி எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி அருகிலிருந்த கடைக்குள் சென்று நின்றது.இதில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சதீஷ் மற்றும் விக்ரம் தூக்கி வீசப்பட்டனர்.வாகனம் மோதிய சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து பார்க்கையில் வாலிபர்கள் இருவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

108 ஆம்புலன்சை ஓட்டி வந்தவர் பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்பவர் படுகாயமடைந்தார்.அதைத் தொடர்ந்து அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து காரணமாக கோவை திருச்சி நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த்தும் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் உயிரிழந்த வாலிபர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

மேலும் படிக்க