• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தடைசெய்யபட்ட நெகிழியை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் – கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி

November 1, 2019 தண்டோரா குழு

கோவை பூமார்க்கெட்டில் தடைசெய்யபட்ட நெகிழியை விற்பனை செய்த கடைகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் அபராதம் விதித்தார்.

கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். தமிழக அரசு நெகிழிப்பைகளுக்கு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளை வேறு வடிவில் தயாரித்து விற்பதாக கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து பூமார்கெட் பகுதியில் உள்ள கடைகளில் கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவட் இன்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வந்த கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பித்தார். மூன்றுக்கு மேற்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழி இருந்ததால் விற்பனையாளருக்கு தல 10ஆயிரம் வரையில் அபராதம் விதித்தார். அதிகாரிகள் உடனடியாக அபராத தொகையும் வசூல் செய்தனர். இந்நிகழ்வு காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விற்பனையளர்களிடம் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பதற்கான கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டதாகவும், மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து சோதனை நடக்கும் எனவும் குறிப்பிட்டார். அதேபோன்று சாலை ஆக்கரிமிப்பு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுங்கள் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க