• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தடைசெய்யபட்ட நெகிழியை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் – கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி

November 1, 2019 தண்டோரா குழு

கோவை பூமார்க்கெட்டில் தடைசெய்யபட்ட நெகிழியை விற்பனை செய்த கடைகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் அபராதம் விதித்தார்.

கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். தமிழக அரசு நெகிழிப்பைகளுக்கு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளை வேறு வடிவில் தயாரித்து விற்பதாக கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து பூமார்கெட் பகுதியில் உள்ள கடைகளில் கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவட் இன்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வந்த கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பித்தார். மூன்றுக்கு மேற்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழி இருந்ததால் விற்பனையாளருக்கு தல 10ஆயிரம் வரையில் அபராதம் விதித்தார். அதிகாரிகள் உடனடியாக அபராத தொகையும் வசூல் செய்தனர். இந்நிகழ்வு காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விற்பனையளர்களிடம் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பதற்கான கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டதாகவும், மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து சோதனை நடக்கும் எனவும் குறிப்பிட்டார். அதேபோன்று சாலை ஆக்கரிமிப்பு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுங்கள் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க