• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதுநிலை மாணவர்கள் மற்றும் அரசு மருதுவர்கள் போராட்டம்

October 31, 2019 தண்டோரா குழு

4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதுநிலை மாணவர்கள் மற்றும் அரசு மருதுவர்கள் இணைந்து,அரசு மருத்துவமனையில் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை பணி அமர்த்த வேண்டும், பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தல் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 6 நாட்களாக இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ள நிலையில் இன்று 100 க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க