• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளித்தால் ரூ. 2 ஆயிரம் சன்மானம் – யங் இந்தியன்ஸ் பவுண்டேசன்

October 30, 2019 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூடி தர தயாராக உள்ளதாக யங் இந்தியன்ஸ் பவுண்டேசன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் யங் இந்தியன்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவ்வமைப்பின் செயலாளர் விஷ்ணுபிரபு,

தமிழ்நாட்டில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூடி தர தயாராக உள்ளதாக தெரிவித்தார். 9150226634 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்த தகவல்களை அளிக்கலாம், மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 2 ஆயிரம் ருபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆழ்துளை கிணறுகளை மூடும் பணிகளை விரிவுப்படுத்த உள்ளதாகவும், நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித் உயிரிழப்பே இறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க