• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயற்கை முறையில் சுவையான தண்ணீராக மாற்றக்கூடிய ஆரோ சுத்திகரிப்பு முறையில் ஒரு புதிய படைப்பு

October 18, 2019 தண்டோரா குழு

தண்ணீரை சுத்திகரிக்கவும் சத்தான சுவை மாறாமல், இயற்கை முறையில் சுவையானதண்ணீராக மாற்றக்கூடிய ஆரோ சுத்திகரிப்பு முறையில் ஒரு புதிய படைப்பினை கேபிஆர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் புதிய தலைமுறை கண்டுபிடித்துள்ளனர்.

கோவை அரசூர் பகுதியில் அமைந்துள்ள கேபிஆர் கல்லூரியில் முன்னாள் மாணவர்களான மோகன் குமார் மற்றும் ஜோகிந்தர் ஆகியோர் இணைந்து தண்ணீரை சுத்திகரிக்கும் சத்தான சுவை மாறாமல் மாற்றக்கூடிய கிருமிகளை அழிக்கக்கூடிய ஆரோ சுத்திகரிப்பு முறையில் ஒரு புதிய படைப்பினை உருவாக்கியுள்ளனர். புதிய படைப்பான அத்தியா டெக் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த அறிவியலாளர் டேனியல் செல்லப்பா, கேபிஆர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கே பி டி சிகாமணி, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அகிலா ஆகியோர் முன்னிலையில் புதிய படைப்பின் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த அறிவியலாளர் டேனியல் செல்லப்பா கூறும்போது இளம் மாணவர்களின் புதிய படைப்பு திறனை நாம் அங்கீகரித்து வரவேற்க வேண்டும் இந்த தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் விரைவில் சென்றடைந்தால் சுத்தமான குடிநீர் அவரிடம் சென்று சேரட்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் அகிலா மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி ஏ எம் நடராஜன் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க