• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குமிட்டிபதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அடித்துசெல்லப்பட்ட தரைப்பாலம்

October 18, 2019 தண்டோரா குழு

மழை காரணமாக கோவை குமிட்டிபதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்துசெல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதை அடுத்து கோவையில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்று பாதைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது, இதில் கோவை எட்டிமடை அடுத்துள்ள குமிட்டிபதி ஆற்றில் நீர் வரத்து அதகரித்துள்ளது. இதனால் குமிட்டிபதி அருகே ஆற்றை கடக்க அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் குமிட்டி பதி மற்றும் அதனை அடுத்துள்ள கிராம மக்கள் சாவடி பகுதிக்கு செல்வதற்கான பாதை தடை பட்டு சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மழை காலங்களில் குமிட்டிபதி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பாதால் , இந்த பகுதிகளில் செக் டேம் கட்டி இந்த நீரை சேமிக்க வேண்டும் என்றும், ஆற்று வெள்ளதால் சேதமான தரைப்பாலத்தை சரி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க