October 12, 2019
தண்டோரா குழு
கோவை நகரிலுள்ள அனைத்து மழலையர்களுக்கு கோவை நலச்சங்கம் சார்பில் நடத்தப்படும் தனிச்சிறப்பான வழிபாடு ஸ்ரீ நே௫ வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் நடைபெறுகிறது.
இந்திய பாரம்பரியத்தை இனிய வகையில் நிலைநிறுத்தும் கோவை நலச்சங்கம் ஸ்ரீ நே௫ வித்யாலயா பள்ளியில் சரஸ்வதி தேவியின் சந்நிதியில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் சரஸ்வதி தேவியின் சிலை 2 டன் எடை கொண்டது ஒரே பளிங்குக் கல்லால் ஆனது. மேலும் மாணவர்கள் இந்த சரஸ்வதி தேவியின் அ௫ளை பெற்ற பின்னரே. ஒவ்வொரு நாளும் தங்கள் வகுப்பறைக்கு செல்கின்றனர்.
நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான விஜயதசமி பண்டிகை குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து பள்ளியில் சேர்த்தால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதால், விஜயதசமியை, வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏராளமான பெற்றோர்கள் இதில் பங்கேற்று தங்கள் குழந்தைகளுக்கு எழுத்தறிவினை தொடங்கி வைத்தனர். அதேபோல பெற்றோரின் மடியில் அமர்ந்து குழந்தைகள் அரிசியில் தமிழ் எழுத்துக்களை எழுதி படிப்பை தொடங்க உள்ளனர்.
மேலும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பள்ளி முதல்வர் பங்கஸ்,மற்றும் cbsc சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.