• Download mobile app
26 Jun 2025, ThursdayEdition - 3424
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த தாய் மகன் கைது

October 10, 2019 தண்டோரா குழு

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

கோவை வடவள்ளி காவல் நிலையம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கோவை சட்டக் கல்லூரிக்கு அருகே உள்ள ஆலமரத்தடி அருகே சந்தேகத்திற்கிடமாக ஒரு மூதாட்டியும் ஒரு வாலிபரும் நின்று கொண்டிருப்பதை பார்த்தார். உடனே அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் அந்த பகுதியில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

உடனடியாக கோவை மருதமலை அடிவாரம், பாரதியார் யூனிவர்சிட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடைய மனைவி வீரம்மாள் (வயது 54), அவருடைய மகன் செல்வராஜ் (வயது 25), ஆகியோரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இன்று இருவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க