October 10, 2019
தண்டோரா குழு
2018 மற்றும் 2019-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் இப்பரிசு ஆறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது. நோபல் பரிசுடன், ஒன்பது மில்லியன் ஸ்விஸ் குரோணர் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூபாய் 6,47,36,688 பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.
இதற்கிடையில் ஏற்கனவே இயற்பியல், வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது. கடந்த 7 ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதிகளில் ஒவ்வொரு துறையாக அவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 2018 மற்றும் 2019-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. போலந்து எழுத்தாளர் வோல்கா டொக்கரசுக்கு 2018 இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு எழுத்தாளர் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுகிறது.