• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2018, 2019 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு

October 10, 2019 தண்டோரா குழு

2018 மற்றும் 2019-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் இப்பரிசு ஆறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது. நோபல் பரிசுடன், ஒன்பது மில்லியன் ஸ்விஸ் குரோணர் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூபாய் 6,47,36,688 பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.

இதற்கிடையில் ஏற்கனவே இயற்பியல், வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது. கடந்த 7 ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதிகளில் ஒவ்வொரு துறையாக அவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 2018 மற்றும் 2019-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. போலந்து எழுத்தாளர் வோல்கா டொக்கரசுக்கு 2018 இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு எழுத்தாளர் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க