• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை மாயம்

October 9, 2019 தண்டோரா குழு

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை மாயமானது குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்.(36). இவரது மனைவி கவிதா.இவர்களுக்கு வெற்றிவேல் (7) என்ற மகனும் சாமினி என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஜெயக்குமார் அவரது மனைவி கவிதா அதே ஊரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சாமினி திடீரென மாயமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர்கள் நேற்று சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்து விட்டு போப்ப நாயை வரவழைத்து சோதனை செய்தனர்.மோப்ப நாய் சிறிது தூரம் சென்று அருகிலிருந்த கிணற்று அருகில் நின்று விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை வரை காணாமல் போன பெண்குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் நேற்று மாலை சூலூர் தீயணைப்புப் படையினரை வரவழைத்த போலீசார் அருகிலிருந்த சுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் தீயணைப்பு வீரர்களை இறக்கி சோதனை செய்தனர்.இருட்டும் வரை தேடிப்பார்த்தும் எந்த தகவும் கிடைக்கவில்லை.மேலும் குழந்தை காணாமல் போனது குறித்து அருகிலிருக்கும் வீட்டிலில் குடியிருக்கும் 2 வாலிபர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் 5 வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க