• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் எல்.ஜி நிறுவனம் ஆதரவு

October 5, 2019 தண்டோரா குழு

ஏர் கம்ப்ரசர் நிறுவனமான எல்.ஜி, உடல்நலம், ஆரோக்கியம், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, எது வரை உங்களது முடிவு கோடு என்ற போட்டியை 40 நாட்களில் ஏற்பாடு செய்தது. அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 2000 பேர் பங்கேற்றனர்.

பணியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் இணைந்து 25 ஆயிரம் மைல்களை கடந்தனர். ஓட்டம்,நடைபயிற்சி, சைக்கிளிங், நீச்சல், ஸ்கிப்பிங், யோகா, ஜாகிங் மற்றும் மறையேற்றம் போன்ற பயிற்சிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து எல்.ஜி நிறுவனத்தின் பிராண்ட் தலைவர் அன்வர் ஜெய் வரதராஜ் கூறுகையில், இந்த சவால் பணியாளர்கள், விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சமுதாயத்தையும் ஒருங்கிணைத்தது. ஒவ்வொருவரையும் இது ஒரு பொது நலனுக்காக ஒன்றாக மாற்றியது என்றார். எல்.ஜி நிறுவனத்தின் மக்கள், அமைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவு இயக்குனர் ஜெயகாந்தன் பேசுகையில், எது உங்களது முடிவுக்கோடு என்ற சவால், உலகம் முழுவதும் உள்ள எங்களுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமான இந்த நிகழ்வை நடத்தியுள்ளனர் என்றார்.

எல்.ஜி செயல் இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி கூறுகையில் ,

புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த எங்களது ஒற்றுமையும் விருப்பத்தையும் சமுதாயத்தின் தேவைக்கு உதவி செய்யக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்ச்சி அடைகிறோம். நாளை கோவையில் நடைபெற உள்ள,புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் புதிய பணியாளர்கள் 1668 பேர் பங்கேற்க உள்ளனர். மேலும் வட அமெரிக்காவில் அக்டோபர் 5-ல் நடைபெற இருக்கும் ஓட்டத்திலும் எல்.ஜி பணியாளர்கள் பங்கேற்கின்றனர் என்றார். கோவை மாரத்தான் போட்டியில் பங்கேற்றுள்ள பணியாளர்களுக்கு இசை புதிய தலைமுறை இன்று காலை கோவை கொடிசியாவில் அறிமுகப்படுத்தினார்.

மேலும் படிக்க